வெளிநாடுகளுக்கு பறக்கும் விருதுநகர் தேங்காய் நார்வெளிநாடுகளுக்கு பறக்கும் விருதுநகர் தேங்காய் நார் ... தனிநபர் வருவாய் ரூ.93,293 ஆக உயர்வு தனிநபர் வருவாய் ரூ.93,293 ஆக உயர்வு ...
சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் கையாள்வதில் நவீன முறை அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2016
12:39

நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி சரக்கு பெட்டகங்களை கையாளும் நவீன முறை, நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு பெட்டகங்களை கையாள்வதில், காலதாமதம் மற்றும் பண விரயமும் ஏற்பட்டது. மேலும், சரக்கு பெட்டகங்களை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள், மணிக்கணக்காக, சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதாலும், சென்னை துறைமுகம் மற்றும் அதை சுற்றி, 25 கி.மீ., துாரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, காலதாமதம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் நோக்கத்தில், சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் நவீன முறை, நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சரக்கு பெட்டகங்கள் மற்றும் அவற்றின் ஆவணங்கள், ரேடியோ அலைவரிசை கருவி மூலம் சோதனை செய்யப்பட உள்ளது.சென்னை துறைமுகத்தில், நவீன முறையை அறிமுகப்படுத்தியபின், மத்திய கலால் மற்றும் சுங்கவரி வாரிய தலைவர் நஜீம் ஷா அளித்த பேட்டி:இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை துறைமுகத்தில் தான், ஏற்றுமதி சரக்கு பெட்டகங்களை கையாள்வதில், நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இறக்குமதி சரக்கு பெட்டகங்கள் கையாள்வது குறித்து, ஓரிரு மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும். சென்னையை தொடர்ந்து, மற்ற துறைமுகங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.தற்போது, சரக்கு பெட்டகங்களை கையாள்வதற்கு, 7 நிமிடங்கள் ஆகிறது. நவீன முறையால், இரண்டு முதல், மூன்று நிமிடங்களில் சோதனை முடிந்துவிடும். இதன் மூலம் காலதாமதம் மட்டுமின்றி, பண விரயமும் குறையும். இது ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)