பதிவு செய்த நாள்
02 ஜூன்2016
12:39
நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி சரக்கு பெட்டகங்களை கையாளும் நவீன முறை, நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு பெட்டகங்களை கையாள்வதில், காலதாமதம் மற்றும் பண விரயமும் ஏற்பட்டது. மேலும், சரக்கு பெட்டகங்களை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள், மணிக்கணக்காக, சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதாலும், சென்னை துறைமுகம் மற்றும் அதை சுற்றி, 25 கி.மீ., துாரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, காலதாமதம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் நோக்கத்தில், சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் நவீன முறை, நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சரக்கு பெட்டகங்கள் மற்றும் அவற்றின் ஆவணங்கள், ரேடியோ அலைவரிசை கருவி மூலம் சோதனை செய்யப்பட உள்ளது.சென்னை துறைமுகத்தில், நவீன முறையை அறிமுகப்படுத்தியபின், மத்திய கலால் மற்றும் சுங்கவரி வாரிய தலைவர் நஜீம் ஷா அளித்த பேட்டி:இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை துறைமுகத்தில் தான், ஏற்றுமதி சரக்கு பெட்டகங்களை கையாள்வதில், நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இறக்குமதி சரக்கு பெட்டகங்கள் கையாள்வது குறித்து, ஓரிரு மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும். சென்னையை தொடர்ந்து, மற்ற துறைமுகங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.தற்போது, சரக்கு பெட்டகங்களை கையாள்வதற்கு, 7 நிமிடங்கள் ஆகிறது. நவீன முறையால், இரண்டு முதல், மூன்று நிமிடங்களில் சோதனை முடிந்துவிடும். இதன் மூலம் காலதாமதம் மட்டுமின்றி, பண விரயமும் குறையும். இது ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|