பதிவு செய்த நாள்
02 ஜூன்2016
14:11
புதுடில்லி : தனிநபர் வருவாய் என்பது, ஒரு நாட்டின் வளத்தை குறிக்கும் காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. இது குறித்து, மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: விலைவாசி அடிப்படையிலான நாட்டின் தனி நபர் வருவாய், 2015 - 16ம் நிதியாண்டில், 93,293 ரூபாயாக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2014 -15ம் நிதியாண்டின், தனிநபர் வருவாய் குறித்த முதல் மறுமதிப்பீடான, 86,879 ரூபாயை விட, 7.4 சதவீதம் அதிகம். தேசிய மொத்த வருவாயை பொறுத்தவரை, 2014 - 15ம் நிதியாண்டில், 112.13 லட்சம் கோடி ரூபாய்; 2015 - 16ம் நிதியாண்டில், 112.14 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது.இது, 2014 - 15ம் நிதியாண்டில், 104.28 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|