பதிவு செய்த நாள்
02 ஜூன்2016
15:37
லண்டன் : அல்ட்ரா சவுண்டை பயன்படுத்தி மிக துல்லியமாகவும், வேகமாகவும் சாக்லேட்டின் தரத்தை பரிசோதிக்கும் முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த புதிய முறையினால் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆகும் செலவு தொகை பெருமளவு குறையும் என கூறப்படுகிறது.
பெல்ஜியம் பல்கலை., ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த முறையின்படி, அல்டரா சோனிக் அலைகளை கோகோ பட்டர் துகள்கள் வழியாக செலுத்தி அதில் கலந்துள்ள பொருட்களின் தரம், சாக்லேட்டின் வடிவம், அதன் தரம் ஆகியவற்றை பரிசோதனை செய்கின்றனர். சாக்லேட் துகள்களுக்குள் உட்செலுத்தப்படும் எல்ட்ரா சோனிக் அலைகளின் பிரதிபலிப்பின் மூலம் பெறப்படும் தகவல்களை கொண்டு சாக்லேட்டின் தரம் கண்டறியப்படுகிறது. இது 5 முறைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சாக்லேட் தயாரிப்பு நடந்து கொண்டிருக்கும் போது தரம் சோதனையிடப்படுவதால் நேரமும் மிச்சப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|