பதிவு செய்த நாள்
03 ஜூன்2016
07:35
புதுடில்லி: மத்திய, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியதாவது:மத்திய அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்க தேசிய கொள்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, முன்னாள் கேபினட் செயலர், பிரபாத் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை, வரும், அக்டோபர், 31க்குள், மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின், தேசிய கொள்கை அறிவிப்பு வெளியிடப்படும்.இந்தியாவின் தயாரிப்பு துறை மற்றும் ஏற்றுமதியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலகங்களின் பங்களிப்பு, முறையே, 45 மற்றும், 40 சதவீதமாக உள்ளது. நலிவுற்ற, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சீரமைப்பது குறித்து ஆராய, இம்மாத இறுதிக்குள் குழு அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|