பதிவு செய்த நாள்
03 ஜூன்2016
07:36
ஒசாகா: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம், வரும் செப்டம்பருடன் முடிவடைகிறது. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என, பா.ஜ., –எம்.பி., சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர் நவுஷத் போர்ப்ஸ், ஜப்பானில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரகுராம் ராஜன், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். சுப்பிரமணியன் சாமியின், அர்த்தமற்ற பேச்சை ஒதுக்கிவிட்டு, ரகுராம் ராஜனுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். இப்பிரச்னையில் ‘தனிநபர் மீதான குற்றச்சாட்டை ஏற்க முடியாது’ என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளதை, நான் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, சர்ச்சை காரணமாக, பணி நீட்டிப்பு வழங்க, அரசு முன்வந்தாலும், அதை ரகுராம் ராஜன் ஏற்க மாட்டார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|