பதிவு செய்த நாள்
03 ஜூன்2016
07:36
புதுடில்லி: முதல் முறையாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் வருவாய், 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த, ‘மினிரத்னா’ அந்தஸ்து பெற்றுள்ள, இந்திய விமான நிலையங்களின் ஆணையம், நாடு முழுவதும், விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது.விமான சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், தங்களின் விமானங்களை நிறுத்தி வைத்தல், விமானங்களை இயக்குதல் போன்றவற்றிற்காக செலுத்தும் கட்டணம் மூலம், விமான நிலையங்களின் ஆணையத்திற்கு வருவாய் கிடைக்கிறது. அதன்படி, கடந்த, 2015 – 16ல், விமான நிலையங்களின் ஆணையத்திற்கு, 10 ஆயிரத்து, 825 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 9,285 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், அதிகளவில் விமான சேவை இயக்கப்பட்டதே, ஆணையத்தின் வருவாய் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|