பதிவு செய்த நாள்
03 ஜூன்2016
07:37
புதுடில்லி: கடந்த மே மாதம், கார், ‘வேன்’ உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை, 7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஏப்ரல் மாதத்தில், 11 சதவீதமாக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில், மாருதி சுசூகி, ஹூண்டாய், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. டில்லியில், 2,000 சி.சி., டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை, ஒன்பது மாதங்களாக சரிவடைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த மே மாதம், இந்நிறுவனம், ‘இன்னோவா கிறிஸ்டா’ என்ற காரை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 6 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த மே மாதம், மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன விற்பனை, உள்நாட்டில், 1,13,162 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1,02,359 ஆக இருந்தது. இதே காலத்தில், ண்டாய் நிறுவனத்தின் விற்பனை, 37,450ல் இருந்து, 41,351 ஆக உயர்ந்துள்ளது.மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை, 8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 19,635 ஆக உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஏப்ரலில், ‘டியாகோ’ காரை அறிமுகப்படுத்தியது. இருந்த போதிலும், இது, மே மாத விற்பனை வளர்ச்சிக்கு பெரிய அளவில் துணை புரியவில்லை. அதுபோல, ‘பிஆர்–வி’ என்ற பதிய காரை, ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய போதிலும், ஒட்டுமொத்த வாகன விற்பனை வளர்ச்சியில், இந்நிறுவனம் மந்தநிலையை சந்தித்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மாசு கட்டுப்பாடு நடவடிக்கை போன்றவற்றால், கடந்த மாதம் பயணிகள் வாகன விற்பனை குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|