பதிவு செய்த நாள்
03 ஜூன்2016
09:38
மும்பை : சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றமான நிலையே தொடர்கிறது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூன் 3) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 134.90 புள்ளிகள் உயர்ந்து 26,977.23 புள்ளிகளாகவும், நிப்டி 35.15 புள்ளிகள் உயர்ந்து 8254.10 புள்ளிகளாகவும் உள்ளன.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதும் இந்திய பங்குச் சந்தைகளின் தொடர் ஏற்றத்திற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2015ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதிக்கு பிறகு இன்று முதல் முறையாக நிப்டி 8250 புள்ளிகளை கடந்துள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வங்கிகள், நிதித்துறை, ஆட்டோ மற்றும் குறிப்பிட்ட தொழில்நுட்ப துறைகளின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது நிப்டியின் அதிரடியான ஏற்றத்திற்கு துணைபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|