பதிவு செய்த நாள்
04 ஜூன்2016
07:39
சென்னை : டூ – வீலர் ரேஸிங் போட்டிகளில் பங்கேற்க, தமிழகத்திலிருந்து, 18 பெண்களை டி.வி.எஸ்., ரேஸிங் பிரிவு தேர்வு செய்துள்ளது.
டூ – வீலர் ரேஸிங் தளத்தில் முதலிடம் வகிக்கும் டி.வி.எஸ்., ரேஸிங், சர்வதேச அளவில் பெண்களுக்கான ரேஸிங் போட்டிகளில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, 18 பெண்களை தேர்வு செய்துள்ளது. பெண்கள் பயிற்சிக்காக, இந்தியாவில் முதன் முதலாக துவக்கப்பட்டுள்ள அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமியில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க உடன்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக, சென்னையில் நிருபர்களை சந்தித்த, டி.வி.எஸ்., ரேஸிங் அணியின் தலைவர் அர்விந்த் பங்கான்கர் கூறியதாவது:இந்தியாவில் ரேஸிங் வீராங்கனைகளுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்க, இந்த பயிற்சி உதவும். இவர்களின் பயிற்சிக்காக புது ரேஸிங் டிரக்குகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமி நிறுவனர் அலிஷா அப்துல்லா கூறியதாவது:முதன் முறையாக தமிழகத்தில், குறிப்பாக சேலம், திருச்சி பகுதிகளை சேர்ந்த பெண்களை தேர்வு செய்துள்ளோம். ஆனால், இத்துறைக்கு கல்லுாரி பெண்களையும், அவரின் பெற்றோரையும் சமாதானப்படுத்தி அழைத்து வருவது மிகவும் கடினமான செயலாக இருந்தது. விரைவில் பெண்களே விரும்பி, டூ –வீலர் ரேஸிங்கிற்கு வருவர் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த குழு வீராங்கனைகள், டில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|