பதிவு செய்த நாள்
04 ஜூன்2016
07:40
புதுடில்லி : புதிய கண்டுபிடிப்பு மையங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, சிலிக்கான் வேலி பகுதி, கண்டுபிடிப்பு மையங்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, ஆப்பிள், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின், கண்டுபிடிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிக அளவில் கண்டுபிடிப்பு மையங்கள் உள்ள, இரண்டாவது நகரமாக, பிரிட்டன் தலைநகர் லண்டன், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் ஆகியவை உள்ளன. சிங்கப்பூர் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், அதிக அளவில் கண்டுபிடிப்பு மையங்கள் உள்ள நகரங்களில், பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆப்பிள், ஏர்பஸ், விசா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|