பதிவு செய்த நாள்
04 ஜூன்2016
07:40
புதுடில்லி : குவாலிட்டி நிறுவனம், தன், ‘பிராண்ட்’ குறித்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து மீண்டது. டில்லியை சேர்ந்த குவாலிட்டி நிறுவனம், பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், ஆறு தொழிற்சாலைகள் உள்ளன. குவாலிட்டி பிராண்ட் தொடர்பாக, கிராவிஸ் என்ற நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தற்போது, அந்த நிறுவனம், வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டது. நீதிமன்ற சிக்கலில் இருந்து மீண்ட, குவாலிட்டி நிறுவனம், விரிவாக்க திட்டங்களுக்காக, 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. தற்போது, குவாலிட்டி, சில்லரை விற்பனையை, 30 சதவீதத்தில் இருந்து, 70 சதவீதமாக உயர்த்துவதற்காக, பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாரை விளம்பர துாதராக நியமித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|