பதிவு செய்த நாள்
04 ஜூன்2016
07:41
புதுடில்லி : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் வலைதளத்தில் பதிவு செய்வோருக்கு, லைப் நிறுவனத்தின், ‘ஸ்மார்ட்’ போன் உடன், ‘4ஜி’ சேவையை வழங்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்தவர்கள், ரிலையன்ஸ் ஜியோ சேவையை சோதனை அடிப்படையில், கடந்த ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், ரிலையன்ஸ் ஊழியர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு, ஜியோவின் தொலை தொடர்பு சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களுக்கு லைப் ஸ்மார்ட் போன் உடன், 4ஜி சேவையை, ரிலையன்ஸ் ஜியோ வழங்க துவங்கியுள்ளது. எனினும், இந்தாண்டு இறுதியில் தான், அதிகாரபூர்வ தொலை தொடர்பு சேவையை, ரிலையன்ஸ் ஜியோ துவக்கும் என, தெரிகிறது. தற்போது, ரிலையன்ஸ் ஜியோ, லைப் ஸ்மார்ட் போனுடன், 3 மாதங்களுக்கு, 4,500 நிமிடங்கள் இலவச அழைப்புகள், வரம்பற்ற தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|