பதிவு செய்த நாள்
05 ஜூன்2016
02:09
புதுடில்லி;இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில் களமிறங்க, வெளிநாடுகளைச் சேர்ந்த பல எண்ணெய் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. சவுதி அரேபியாவைச் சேர்ந்த, சவுதி அரம்கோ, இந்தியாவில், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. பிரிட்டீஷ் பெட்ரோலியம் நிறுவனம், இந்தியாவில் விமான எரிபொருள் விற்பனையில் ஈடுபட உள்ளது. இதற்கு உரிமம் வழங்க, பெட்ரோலிய துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் சிறிய அளவில், பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டு வரும், பிரான்சின், டோட்டல், நெதர்லாந்தின், ஷெல் ஆகியவை, விரிவாக்க திட்டத்தை மேற்கொள்ள உள்ளன. பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விற்பனையில், பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் கொழுத்த லாபம் ஈட்டி வருகின்றன. இந்தியாவில், கச்சா எண்ணெய்க்கான தேவை, இந்தாண்டின் முதல் காலாண்டில், மிகவும் அதிகரித்துள்ளது. ‘கச்சா எண்ணெய் பயன்பாட்டில், இந்தியா, சீனாவை விஞ்சும்’ என, சர்வதேச எரிசக்தி முகமை சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை துவக்க ஆர்வமாக உள்ளன.
உள்நாட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய நிறுவனங்களும், மீண்டும், பெட்ரோல், டீசல் விற்பனையை துவக்கி உள்ளன. நாடு முழுவதும் மேலும் பல விற்பனை நிலையங்களை துவக்க உள்ளன. எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தில், ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் நிறுவனம், 49 சதவீத பங்குகளை வாங்கி, இந்திய எண்ணெய் துறையில் கால் பதிக்க உள்ளது. இதற்கான பேச்சு நடைபெற்று வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|