பதஞ்­ச­லி­யுடன் போட்டி போடும் கோல்கேட்பதஞ்­ச­லி­யுடன் போட்டி போடும் கோல்கேட் ... இந்திய ரூபாய் மதிப்பில் அதிரடி உயர்வு: ரூ.66.88 இந்திய ரூபாய் மதிப்பில் அதிரடி உயர்வு: ரூ.66.88 ...
பிர­மிக்­கத்­தக்க வளர்ச்­சியில் நுண்­கடன் துறை ஐ.எப்.சி., ரூ.435 கோடி முத­லீடு செய்ய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
07:00

கோல்­கட்டா : இந்­தி­யாவில் அதி­வே­க­மாக வளர்ச்சி பெற்று வரும் நுண்­கடன் துறையில், உலக வங்­கியின் ஓர் அங்­க­மான, ஐ.எப்.சி., நிறு­வனம், 435 கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது.‘வரும் ஜூலை 4ம் தேதி நடை­பெறும், இயக்­குனர் குழு கூட்­டத்தில், முத­லீ­டுகள் குறித்து, இறுதி முடிவு எடுக்­கப்­படும்’ என, ஐ.எப்.சி., உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.அவர் மேலும் கூறி­ய­தா­வது: இந்­திய நிதி சேவைகள் துறையில், நுண்­கடன் பிரிவு ஒன்­றுதான், பிர­மிக்­கத்­தக்க வகையில் வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. கடந்த நிதி­யாண்டில், இத்­து­றையின் வருவாய், 84 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது. அது­போல, வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்­கையும், 44 சத­வீதம் உயர்ந்­துள்­ளது.இத்­த­கைய வளர்ச்சி கார­ண­மாக, நுண்­கடன் துறையில் ஐ.எப்.சி., அதிக அளவில் முத­லீடு செய்ய விரும்­பு­கி­றது. இதன்­படி, நுண்­க­டன்­களை வழங்கி வரும், சிட்டி குழு­மத்தின், ஜன­லட்­சுமி பைனான்­சியல் சர்­வீசஸ் நிறு­வ­னத்தில், 330 கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இந்­நி­று­வ­னத்தில், ஐ.எப்.சி., ஏற்­க­னவே, 2014ல், 120 கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ளது. தற்­போது, இரண்டாம் கட்­ட­மாக முத­லீடு செய்­யப்­பட உள்­ளது. அடுத்து, கிராமீன் கூட்டா பைனான்­சியல் சர்­வீசஸ் நிறு­வ­னத்தில், ஐ.எப்.சி., 135 கோடி ரூபாய் முத­லீடு செய்ய உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.குடிசை தொழில்கள், கைவி­னை­ஞர்கள், நடை­பாதை வியா­பா­ரிகள் உள்­ளிட்­டோ­ருக்கு, நுண்­கடன் நிறு­வ­னங்கள், கடன் வழங்­கு­கின்­றன. வங்­கி­களை அணுக விரும்­பாதோர், எளி­மை­யான நடை­மு­றையில் சுல­ப­மாக கடன் பெற உதவும், நுண்­கடன் நிறு­வ­னங்­களை நாடு­கின்­றனர். இந்­தி­யாவில், நகர்­பு­றங்­களில் அதிக அளவில் நுண்­க­டன்­களை வழங்கும் மிகப்­பெ­ரிய நிறு­வ­ன­மாக, கர்­நா­ட­காவைச் சேர்ந்த, ஜன­லட்­சுமி பைனான்­சியல் சர்­வீசஸ் உள்­ளது. இந்­நி­று­வனம், 18 நக­ரங்­களில், 330 கிளை­க­ளுடன் செயல்­பட்டு வரு­கி­றது. கடந்த, மார்ச் நில­வ­ரப்­படி, இந்­நி­று­வனம், 46 லட்சம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன், 9,100 கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக, கடன் வழங்­கி­யுள்­ளது.கிராமீன் கூட்டா பைனான்­சியல் சர்­வீசஸ் நிறு­வ­னத்தின் தலை­மை­யகம், கர்­நா­டக மாநிலம், பெங்­க­ளு­ரில் உள்­ளது. இந்­நி­று­வனம், ஐந்து மாநி­லங்­களில், 298 கிளைகள் மூலம், நுண்­க­டன்­களை வழங்கி வரு­கி­றது. கடந்த மார்ச் நில­வ­ரப்­படி, இந்­நி­று­வனம் வழங்­கிய நுண்­கடன், 180 கோடி ரூபாய்; வாடிக்­கை­யாளர் எண்­ணிக்கை, 12 லட்சம் என்ற அளவில் உள்­ளது. இந்­நி­று­வ­னத்தில், நெதர்­லாந்தைச் சேர்ந்த, கிரெடிட் அசெஸ் ஏஷியா நிறு­வனம், 81 சத­வீத பங்கு மூல­த­னத்தைக் கொண்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)