தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் ...
அடிக்கடி வெளிநாடு செல்பவரா?புதிய வசதி அறிமுகமாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
15:43

புதுடில்லி : வெளிநாடுகளுக்கு செல்வோர், பாஸ்போர்ட், விசா என பல்வேறு ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, பல மணி நேரம் முன்னதாக விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதை தவிர்க்க, அடிக்கடி வெளிநாடுகள் செல்பவர்களுக்கும், திரையுலகினர், பிரபலங்கள், பிரபல தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கும் இதில் இருந்து விலக்கு அளித்து, இந்த ஆவண சரிபார்ப்பை எளிமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த வசதியை பெறுபவர்கள் மீது, குற்ற வழக்குகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க, உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. எந்தெந்தப் பிரிவினருக்கு இதுபோன்ற சலுகை அளிக்கலாம் என்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த புதிய முறையின்படி, சலுகை அளிக்கப்படுபவர்களுடைய ஆவணங்கள், முன்னதாகவே சரி பார்க்கப்படும். விமான நிலையம் சென்றதும், இதற்காக அமைக்கப்பட உள்ள கருவியில், தங்களுடையவிவரங்களை பதிவு செய்தால் போதும்; சில நிமிடங்களில் ஆவண சரிபார்ப்பு உறுதி செய்யப்படும்.அமெரிக்காவில் இதுபோன்ற வசதி உள்ளது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு திட்டம் என்ற இந்த திட்டத்தின் கீழ், சர்வதேச அளவில் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கும் இந்த சலுகையை அளிக்கும் வகையில், இந்தியா - அமெரிக்கா இடையே நேற்று முன்தினம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோ ருக்கு இந்த சலுகை அளிக்கப்பட உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)