பதிவு செய்த நாள்
07 ஜூன்2016
05:06
மும்பை : ரிசர்வ் வங்கி, கரன்சிகளை அச்சடிக்க, ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் செலவிடுகிறது. இதை குறைக்கவும், கள்ள நோட்டு, கறுப்பு பணம் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், ‘ஸ்மார்ட் போன்’ வாயிலான பணப் பரிவர்த்தனை திட்டத்தை, ரிசர்வ் வங்கி இம்மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, ‘நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ என்ற நிறுவனம் மூலம், ‘யு.பி.ஐ.,’ எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை செயல் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில், முதற்கட்டமாக, 19 வங்கிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், ‘கிரெடிட், டெபிட்’ கார்டுகள், மொபைல் பணப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை விட, மிகச் சுலபமாக பணம் செலுத்தலாம். இந்த வசதி பரவலாகும்பட்சத்தில், ரூபாய் நோட்டுகளின் தேவை குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|