பதிவு செய்த நாள்
07 ஜூன்2016
05:09
மும்பை : கே.கே.ஆர்., இந்தியா, குவாலிட்டி நிறுவனத்தில், 600 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. குவாலிட்டி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த முழு ஆண்டில், 6,416 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. குவாலிட்டி, தன் விற்பனையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கே.கே.ஆர்., இந்தியா நிறுவனம், குவாலிட்டியில், 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதுகுறித்து, குவாலிட்டி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:பால் மற்றும் பால் பொருட்களின் தேவை ஆண்டுதோறும், 5 சதவீதம் அதிகரித்து, 2022ல், 20 கோடி டன்னாக அதிகரிக்கும் என, தேசிய பால் மேம்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. அதை பூர்த்தி செய்வதில், குவாலிட்டியின் பங்கு அதிகம் இருக்கும். அதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|