பதிவு செய்த நாள்
07 ஜூன்2016
05:09
புதுடில்லி : தமிழகத்தில், கடலுார் அருகே, நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 2010ல், 11,500 கோடி ரூபாய் முதலீட்டில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க துவங்கியது. கடந்த 2014, ஏப்ரலில் உற்பத்தியை துவக்க திட்டமிட்டிருந்த நிலையில், 2011ல், ‘தானே’ புயல் தாக்கியதில், சுத்திகரிப்பு ஆலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த இழப்பில் இருந்து மீண்டு, ஆலைப் பணிகளை துவக்க, ஐ.ஓ.சி., சவுதி அரேபிய அரசு உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம், நாகார்ஜுனா நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. இந்நிலையில், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘டிவி’க்கு அளித்த பேட்டியில், ‘ஆண்டுக்கு, 1.20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறனுள்ள, நாகார்ஜுனா ஆலையை, சட்ட ரீதியில் புனரமைத்து, செயல்பாட்டிற்கு கொண்டு வர, மத்திய அரசு உதவி செய்யும்’ என, தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|