பதிவு செய்த நாள்
07 ஜூன்2016
05:11
புதுடில்லி : ‘தென்னிந்தியாவில், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில், ஸ்திரமான அரசுகள் அமைந்துள்ளதால், அவை, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இதனால், அடுத்து வரும் மாதங்களில் சிமென்ட்டிற்கான தேவை அதிகரிக்கும்’ என, இத்துறை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
நிதி நிலவரம்கடந்த மார்ச்சுடன் முடிந்த நான்காவது காலாண்டில், சிமென்ட் விலை, மூட்டைக்கு, எட்டு ரூபாய் குறைந்தபோதிலும், தென்னிந்திய சிமென்ட் நிறுவனங்களின் நிதி நிலவரம் நன்கு இருந்தது. இதற்கு, கச்சா எண்ணெய் விலை சரிவு, சிமென்ட் விற்பனை உயர்வு போன்றவை துணை புரிந்துள்ளன. கடந்த, 2015, மார்ச் வரையிலான காலாண்டில், 50 கிலோ கொண்ட, ஒரு மூட்டை சிமென்ட் விலை, 361 ரூபாயாக இருந்தது; இது, அக்., – டிசம்பரில், 344 ரூபாயாக சரிவடைந்து, இந்தாண்டு, மார்ச் வரையிலான காலாண்டில், 336 ரூபாயாக மேலும் குறைந்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா அரசுகள், நீர்ப்பாசனம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதால், அம்மாநிலங்களில், சிமென்ட்டிற்கான தேவை அதிகரித்தது. இதனால், அங்கு, சிமென்ட் விலை, 50 – 80 ரூபாய் வரை உயர்ந்தது. இதன் காரணமாக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, தமிழகம்,கேரளா ஆகிய மாநிலங்களுக்கு, சிமென்ட் வரத்து குறைந்தது.
விற்பனை உயர்வுஇது, தமிழகத்தைச் சேர்ந்த, ராம்கோ சிமென்ட்ஸ், இந்தியா சிமென்ட்ஸ், டால்மியா பாரத் மற்றும் ஓரியண்ட் சிமென்ட் போன்ற நிறுவனங்களின் சிமென்ட் விற்பனை உயர வழி வகுத்துள்ளது. வரும் மாதங்களில், சிமென்ட்டிற்கான தேவை அதிகரித்து, அவற்றின் விற்பனை உயரும் என்பதால், தென்னிந்திய சிமென்ட் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர வாய்ப்புள்ளது என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|