பதிவு செய்த நாள்
07 ஜூன்2016
12:09
மும்பை : வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கடனுக்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை. மேலும் நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் இன்று(ஜூன் 7-ம் தேதி) மும்பையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து வருமாறு…• ரெப்போ வட்டி விகிதம் எனப்படும் குறுகியகால கடனுக்கான வட்டிவிகிதத்தில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 6.5 சதவீதமே நீடிக்கிறது. • இதேப்போன்று ரிவர்ஸ் ரெப்போ வட்டி வகிதம் 6 சதவீதத்திலும், சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதத்திலேயே நீடிக்கிறது.• நடப்பாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாகவே இருக்கும் என்றும், பணவீக்கம் 5 சதவீதத்தில் நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. • கச்சா எண்ணெய் விலை, அமல்படுத்தப்பட உள்ள 7-வது ஊதியக்குழு போன்றவற்றை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரகுராம் பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா?ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னராக ரகுராம் ராஜன் உள்ளார். இவரின் பதவிகாலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இவர் இந்த பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று சுப்ரமணியசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுப்பற்றி அவரிடத்தில் கேட்டபோது அதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|