பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
07:33
புதுடில்லி : பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற இணையதள வணிக நிறுவனங்களுக்கு சென்ற ஊழியர்கள், அங்கு இருந்து வெளியேறி உணவகங்களில் சேர்ந்து வருகின்றனர். உள்நாட்டில், டோமினோஸ், மெக் டொனால்டு, கே.எப்.சி., போன்ற உணவகங்களில் உணவுகளை டெலிவரி செய்யும் பணியில் இருந்த பல ஊழியர்கள், இணையதள வணிக நிறுவனங்களில் சேர்ந்தனர். குறிப்பாக, பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், ரோட் ரன்னர், ஷேடோபேக்ஸ், டைனிஅவுல் உள்ளிட்ட பல இணையதள வணிக நிறுவனங்கள் துவங்கப்பட்டதும், அந்த நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து, பொருட்களை, ‘டெலிவரி’ செய்து வந்தனர். இந்த நிலையில், இணையதள வணிக நிறுவனங்களில், அதிக வேலை நேரம், கூடுதல் பணிச்சுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த, 10 ஆயிரம் ஊழியர்கள், மீண்டும், பழையபடி உணவகங்களில் வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|