பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
07:33
புதுடில்லி : டாடா நிறுவனத்தின், ‘டியாகோ’ கார் வேண்டி, நாடு முழுவதும், 15 ஆயிம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், சமீபத்தில், ‘டியாகோ’ என்ற பெயரில், புதிய காரை அறிமுகம் செய்தது. இந்த காரின் விலை, டில்லியில், 3.20 லட்சம் ரூபாய் முதல், 5.54 லட்சம் ரூபாய் வரை உள்ளது. டாடாவின் டியாகோ கார், ஹூண்டாய் நிறுவனத்தின் ஐடென் மற்றும் மாருதி சுசூகி நிறுவனத்தின் செலிரியோ ஆகிய கார்களுக்கு, கடும் போட்டியாக உருவெடுத்து உள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன டீலர்களிடம், டியாகோ கார் குறித்து, ஒரு லட்சம் பேர் கருத்து கேட்டு உள்ளனர். அதில், 15 ஆயிரம் பேர், டியாகோ காருக்கு முன்பதிவு செய்து உள்ளனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|