பதிவு செய்த நாள்
09 ஜூன்2016
04:32
புதுடில்லி : இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம், மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், சுர்தா என்ற இடத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்திற்கு சுரங்கம் உள்ளது. தற்போது, இந்த நிறுவனத்தின் உற்பத்தித்திறன், 40 லட்சம் டன் என்றளவில் உள்ளது. இதை, 2017 – 18ம் ஆண்டில், 1.20 கோடி டன்னாக அதிகரிக்க, சுர்தாவில் உள்ள சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. இந்துஸ்தான் காப்பர் நிறுவனம், சுரங்க பணிகளை மேற்கொள்வதற்காக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியா ரிசோர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நியமித்து உள்ளது. இந்த நிலையில், இரு நிறுவனங்களுக்கும் இடையில், பிரச்னை ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால், இந்துஸ்தான் காப்பரின் சுரங்கத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|