பதிவு செய்த நாள்
09 ஜூன்2016
04:33
புதுடில்லி : அதானி நிறுவனம், 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தாமிர ஆலையை குஜராத் மாநிலத்தில் அமைக்க உள்ளது. குஜராத் மாநிலம், முத்ரா என்ற இடத்தில், அதானி நிறுவனத்துக்கு, ‘அதானி போர்ட் சிறப்பு பொருளாதார மண்டலம்” உள்ளது. இங்கு, அதானி பவர் நிறுவனம், 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட செலவில், ஆண்டுக்கு, 10 லட்சம் டன் திறன் உடைய, தாமிர உருக்காலையை அமைக்க முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தில், தாமிரத்தை உருக்குதல், தாமிரம் சுத்திகரிப்பு, சல்பியூரிக் அமிலம், உள்ளிட்ட ஆலைகளும் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆலையின் மூலம், 2,000 பேருக்கு நேரடியாகவும், 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்க உள்ளது. தாமிர உருக்காலை அமைப்பதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க, 900 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த ஆலையில் பயன்படுத்த, 300 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|