பதிவு செய்த நாள்
09 ஜூன்2016
04:34
ஜெய்பூர் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது: எஸ்.பி.ஐ., உடன், ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதல், ஒரு மாதத்தில் கிடைக்கும் என, தெரிகிறது. இதையடுத்து, வங்கி ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படும். வங்கி ஊழியர்களின் அச்சம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். இணைப்பு தொடர்பான பணிகள், ஆறு மாதங்களில் முடிவடையும். அதன்பின், எஸ்.பி.ஐ.,யின் சந்தை பங்களிப்பு, போட்டி வங்கியை விட, மூன்று மடங்கு உயரும். இந்த இணைப்பால், பலவகை செலவினங்கள் பெருமளவு குறையும். வங்கித் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றை சமாளிக்க, போதிய மூலதனம் தேவை. இத்தகைய சூழலை, சிறிய வங்கிகள் சமாளிப்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|