பதிவு செய்த நாள்
09 ஜூன்2016
04:35
வாஷிங்டன் : ‘அமேசான்’ நிறுவனம், இந்தியாவில், கூடுதலாக, 300 கோடி டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம், இணையதள வணிகத்தில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், இந்தியாவில், 200 கோடி டாலர் முதலீடு செய்ய போவதாக, 2014ல் அறிவித்தது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக, அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். அங்கு, மோடி பங்கேற்ற கூட்டத்தில், அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெப் பெஸோசும் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, இந்தியாவில், எங்கள் நிறுவனத்தில், 45 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இந்தியாவில், அமேசான் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்காக, கூடுதலாக, 300 கோடி டாலர் முதலீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|