‘உங்கள் தொழிலை ‘ரோபோ’ பறிக்கும்’‘உங்கள் தொழிலை ‘ரோபோ’ பறிக்கும்’ ... 3 மாதத்தில் முதன் முறை­யாக தொழில் உற்­பத்தி பின்­ன­டைவு 3 மாதத்தில் முதன் முறை­யாக தொழில் உற்­பத்தி பின்­ன­டைவு ...
இடர்ப்­பா­டு­க­ளுக்கு தீர்வு; இந்­திய நெடுஞ்­சாலை துறை எழுச்­சிக்கு ரூ.8,450 கோடி மறு­கடன் உதவும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
07:39

புது­டில்லி : ‘இந்­திய நெடுஞ்­சாலை துறை, 8,450 கோடி ரூபாய் அள­விற்கு, மறு­க­டன்­களை திரட்டி, இடர்ப்­பா­டு­களில் இருந்து மீள வாய்ப்­புள்­ளது’ என, ‘இந்­தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:கடந்த சில ஆண்­டு­க­ளாக, நெடுஞ்­சாலை சார்ந்த திட்­டங்­களை மேற்­கொண்டு வரும் பல நிறு­வ­னங்கள் வருவாய் இழப்­பையும், நிதி நெருக்­க­டி­யையும் சந்­தித்து வரு­கின்­றன. பல திட்­டங்­களில் எதிர்­பார்த்த வருவாய் கிடைக்­காத நிலை உள்­ளது. நிலம் கைய­கப்­ப­டுத்­து­வ­திலும் பல்­வேறு பிரச்­னைகள் உள்­ளன.
புதிய நடைமுறைஇத்­த­கைய சாத­க­மற்ற சூழ­லிலும், நெடுஞ்­சாலை பணி­களில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்கள், 8,450கோடி ரூபாய் வரை மேலும் கடன் திரட்ட வாய்ப்­புள்­ளது. இந்த நிதி­யா­தா­ரத்­துடன், இடர்ப்­பா­டு­களை சமா­ளிக்க எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள், நெடுஞ்­சாலை துறைக்கு புத்­து­யி­ரூட்டும். ஏற்­க­னவே செய்த முத­லீ­டுகள், லாப­க­ர­மா­ன­வை­யாக மாறும்.நெடுஞ்­சாலை திட்­டங்­களை பூர்த்தி செய்­துள்ள பல நிறு­வ­னங்கள், வட்டி சுமையை குறைக்கும் நோக்கில், மூல­தன சந்­தையில் நிதி திரட்­டவும், வங்­கி­களில் மறு­கடன் பெறு­வ­தற்கும் முயற்­சித்து வரு­கின்­றன. இந்த வகையில் திரட்­டப்­படும் நிதி, புதிய திட்­டங்­களில் முத­லீடு செய்­வ­தற்கும் பயன்­ப­டுத்­தப்­படும் என்­பதால், நெடுஞ்­சாலை துறை எழுச்சி காண வாய்ப்­புஉள்­ளது.
நெடுஞ்­சாலை திட்­டங்­களில், மத்­திய அரசும், தனி­யாரும், 40:60 சத­வீத அடிப்­ப­டையில் முத­லீடு மேற்­கொள்ளும் புதிய நடை­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ பட்­டுள்­ளது. பழைய நடை­முறை போலன்றி, தற்­போது, நெடுஞ்­சாலை பணி துவங்­கி­யதும், மத்­திய அரசின், 40 சத­வீத முத­லீட்டை தவ­ணையில் பெறு­வ­தற்கு, இத்­திட்டம் வழி வகுக்­கி­றது. அடுத்த இரு ஆண்­டு­களில், நெடுஞ்­சாலை துறையில், 47 சத­வீத பணி­களில், இந்த நடை­மு­றையே பின்­பற்­றப்­படும். இது, ஏற்­க­னவே நெடுஞ்­சாலை பணி­களில் கையை சுட்டுக் கொண்டு, விலகிச் சென்ற பல நிறு­வ­னங்­களை, மீண்டும் ஈர்க்க துணை புரிந்து வரு­கி­றது.
அதிகரிக்கும் முதலீடுகள்நடப்பு நிதி­யாண்டு பட்­ஜெட்டில், சாலைகள் மற்றும் நெடுஞ்­சாலை திட்­டங்­க­ளுக்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அதில், வட கிழக்கு பிராந்­தி­யத்­திற்கு, சிறப்பு சாலை மேம்­பாட்டு திட்­டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால், நெடுஞ்­சாலை துறையில் தனியார் முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும். தற்­போது, அதிக கடன் சுமை­யுடன், 25,500 கோடி ரூபாய் மதிப்­பி­லான நெடுஞ்­சாலை திட்­டங்கள் உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இக்­க­டன்­களை மறு­சீ­ர­மைக்­கவோ அல்­லது மறு­க­டன்­களை திரட்­டவோ நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சியம். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)