பதிவு செய்த நாள்
12 ஜூன்2016
01:29
கோவை:கோவையில், மோட்டார் வாகன கண்காட்சி நடக்க உள்ளது. இந்த கண்காட்சியில், மோட்டார் வாகன துறையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்டு, மகிந்திரா அண்டு மகிந்திரா உள்ளிட்ட, 80 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மூன்று நாட்கள் நடக்கும் கண்காட்சியில், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், உதிரி பாக விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்று, வாங்குவோர், விற்பனையாளர் இடையில் உள்ள இடைவெளியை நீக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
இந்தியாவில் வாகன டயர் தேவையை பூர்த்தி செய்வதில், 90 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, 11 டயர் தயாரிப்பு நிறுவனங்களும், கோவை கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. வரும் ஆக., 6ம் தேதி துவங்கும் மாநாட்டை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைக்க வாய்ப்புள்ளதாக, மாநாட்டு ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|