பதிவு செய்த நாள்
12 ஜூன்2016
01:31
புதுடில்லி:சமையல் சாதனங்கள் செய்வதற்கான, ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை’ இறக்குமதி செய்வதில் தரக் கட்டுபாட்டு உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை பயன்படுத்தி, பல வகையான சமையல் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் பலவற்றின் தரம் குறைவாக இருக்கிறது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை பல நிறுவனங்கள், சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்கின்றன. அவற்றில் பல, தரம் குறைந்தவையாக இருப்பதாக தெரிகிறது. இதனால், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் சமையல் அறை சாதனங்களும் தரம் இல்லாமல் உள்ளன.
இதையடுத்து, அரசு குறிப்பிட்ட சில வகை ஸ்டீல்களை குறிப்பிட்டு, அதன் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு உத்தரவை மீறி, தரம் குறைந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|