பதிவு செய்த நாள்
12 ஜூன்2016
02:06
கோல்கட்டா:ஜவுளி, வாட்ச் உள்ளிட்ட பொருட்களுக்கு கடன் வழங்க, அவற்றின் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன், பஜாஜ் பைனான்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், ‘டிவி, ப்ரிட்ஜ்’ உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் வாங்குவதற்காக, வாடிக்கையாளருக்கு கடன் உதவி வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், கடந்த ஆண்டில், 55 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, ஜவுளி, காலணி, வாட்ச், கூலிங் கிளாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கும் கடன் வழங்க முடிவு செய்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் கடனுக்கான வட்டியை, பொருட்களுக்கான தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கும். பஜாஜ், ஏற்கனவே, ‘பிளிப்கார்ட், குளோபல் டெசி’ உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|