அடுத்த 4 ஆண்­டு­களில் வலை­தள பொருட்கள் விற்­பனை எகிறும்:   17.5 கோடி வாடிக்­கை­யாளர் இணைவர்அடுத்த 4 ஆண்­டு­களில் வலை­தள பொருட்கள் விற்­பனை எகிறும்: 17.5 கோடி ... ... முத­லீட்­டா­ளர்கள் உத்தி  எப்­படி இருக்க வேண்டும்? முத­லீட்­டா­ளர்கள் உத்தி எப்­படி இருக்க வேண்டும்? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நண்பர்களுக்கு கடன்: கவனிக்க வேண்டியவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
07:32

கடன் பெறும் போது கவ­ன­மாக இருப்­பது போலவே கடன் கொடுக்கும் போதும் கவ­ன­மாக இருக்க வேண்டும். பல நேரங்­களில் உற­வி­னர்­க­ளுக்கோ, நண்­பர்­க­ளுக்கோ கடன் கொடுக்கும் சூழ்­நிலை உரு­வா­கலாம். அவ­ச­ர­மாக பணம் தேவை என்று வந்து நிற்கும் போது உதவி செய்­வது தான் இயல்பு. இப்­படி உற­வி­னர்­க­ளுக்கும், நண்­பர்­க­ளுக்கும் கடன் கொடுத்து உத­விய அனுபவம் பல­ருக்கும் உண்டு. பெரும்­பாலும் கடன் பெற்­ற­வர்கள், அதை உரிய நேரத்தில் கொடுத்து நன்றி தெரி­விக்­கலாம் என்­றாலும் ஒரு சிலர், வாங்­கிய கடனை திருப்பி செலுத்­தாமல் இழுத்­த­டிக்கும் சூழலும் வரலாம். சில நேரங்­களில், அத்­த­கைய சோத­னை­யிலும் அவர்கள் சிக்கிக் கொள்­ளலாம்; எப்­படி இருந்­தாலும் சிக்கல் தான். அதற்­காக, கடன் கொடுக்­காமல் இருக்க வேண்டும் என்­றில்லை; கொஞ்சம் கவ­ன­மாக இருந்தால் போதும்.
நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கு கடன் கொடுக்கும் முன் கவ­னிக்க வேண்­டிய விஷ­யங்கள்:* உங்­களால் முடிந்தால் மட்­டுமே கடன் கொடுங்கள். மாறாக கேட்­பவர் தவ­றாக நினைத்துக் கொள்­வாரோ என்று நினைத்து கடன் கொடுக்க வேண்டாம். பொரு­ளா­தார சூழல் இடம் தர­வில்லை எனில், ‘எனக்கு உதவி செய்ய விருப்பம் தான், ஆனால் என்­னிடம் இப்­போது கூடு­த­லாக பணம் இல்லை’ என, எடுத்துச் சொல்­லுங்கள். முடிந்தால் கடன் பெறு­வ­தற்­கான மாற்று வழி­களை பரிந்­து­ரைக்­கலாம். மன­மில்­லாமல் தவிர்க்­கவும் வேண்டாம்; கடன் கொடுப்­ப­தற்­காக நீங்கள் சிக்­க­லுக்­கு­ளா­கவும் வேண்டாம்* கடன் கேட்­பவர் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வ­ராக, மிகவும் நெருங்­கி­ய­வ­ராக இருந்­தாலும் கூட உங்­களால் கொடுக்க முயன்ற தொகையை மட்­டுமே கொடுக்­கவும். ஏனெனில், எதிர்­பா­ராத கார­ணத்தால் அவரை மீறி பணத்தை உரிய காலத்தில் கொடுக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டாலும், நீங்கள் பணத்தை கேட்டு வற்­பு­றுத்தும் நிலை இருக்­காது. எனவே, திரும்பி செலுத்­தப்­ப­டா­விட்­டாலும் பர­வா­யில்லை என கருதும் தொகையை கொடுக்­கவும்* தெரிந்­த­வர்­க­ளிடம் கடன் பெறும் போது திரும்பி செலுத்­து­வ­தற்­கான நிர்­பந்தம் இல்­லாமல் போகலாம். மேலும் கடன் பெற்­றவர், தாம­த­மாக கொடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைக்­கலாம். இதனால், மனக் கசப்­புகள் ஏற்­ப­டலாம். எனவே, பணம் கொடுக்கும் போதே அதை எப்­போது, எப்­படி திரும்பிச் செலுத்த வேண்டும் என எதிர்­பார்க்­கி­றீர்கள் என்­ப­தையும் தெளி­வாக குறிப்­பிட வேண்டும். தேவை­யெனில், வட்­டியும் செலுத்­து­மாறு கூறலாம்* இது கொஞ்சம் சிக்­க­லா­னது தான். ஆனால் அவ­சி­ய­மா­னது. கொடுத்த கட­னுக்­காக எழுத்­துப்­பூர்­வ­மான ஒப்­பந்­தத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் நிபந்­த­னை­க­ளையும் குறிப்­பிட வேண்டும். தேவை­யெனில் இதற்கு சட்ட அங்­கீ­கா­ரமும் பெறலாம். இரு தரப்­பி­ன­ருக்­குமே இது உத­வி­யாக இருக்கும்* கடன் கொடுத்த பின் உரிய நேரத்தில் அதை திரும்ப கேட்க அல்­லது தவ­ணையை நினை­வுப்­ப­டுத்த மறக்க வேண்டாம். தெரிந்­தவர் தானே எனும் அலட்­சியம் ஏற்­பட்டு பணம் தரு­வதை தாம­த­மாக்­கு­வதை இது தவிர்க்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)