அடுத்த 4 ஆண்­டு­களில் வலை­தள பொருட்கள் விற்­பனை எகிறும்:   17.5 கோடி வாடிக்­கை­யாளர் இணைவர்அடுத்த 4 ஆண்­டு­களில் வலை­தள பொருட்கள் விற்­பனை எகிறும்: 17.5 கோடி ... ... முத­லீட்­டா­ளர்கள் உத்தி  எப்­படி இருக்க வேண்டும்? முத­லீட்­டா­ளர்கள் உத்தி எப்­படி இருக்க வேண்டும்? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இளைஞர்களும்... பணி சூழலும்..!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
07:33

இக்­கால இளை­ஞர்கள் கடி­ன­மாக உழைக்கக் கூடி­ய­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர். மில்­லி­னியல்ஸ் (1982 முதல் 1996 வரை பிறந்த, 20 முதல், 34 வய­தா­ன­வர்­களை கொண்ட தலை­முறை) என்று, பிர­ப­ல­மாக குறிப்­பி­டப்­படும் இக்­கால இளை­ஞர்கள், முந்­தைய தலை­மு­றை­யி­னரை விட அதிக நேரம் பணி­யாற்றக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர் என, வேலை­வாய்ப்பு நிறு­வ­ன­மான மேன்­பவர் குரூப் நடத்­திய ஆய்வு தெரி­விக்­கி­றது. இக்­கால இளை­ஞர்­களின் பணி வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளும் நோக்­கத்­துடன், இந்­தியா உள்­ளிட்ட, 25 நாடு­களில், 19 ஆயிரம் இளம் ஊழி­யர்கள் மத்­தியில் நடத்­தப்­பட்ட இந்த ஆய்வில் (மில்­லி­னியல் கேரீரிஸ்: 2020 விஷன்), 2020ல் இவர்­களே அதிக அளவில் (35%) பணியில் இருப்­பார்கள் என்­பது உட்­பட பல சுவா­ரஸ்­ய­மான விஷ­யங்கள் தெரிய வந்­துள்­ளது.
திறனில் கவனம்இக்­கால இளை­ஞர்­களில், 93 சத­வீதம் பேர் திறன் வளர்ச்­சியை, எதிர்­கால வளத்­திற்கு முக்­கி­ய­மாக கரு­து­கின்­றனர். இதற்­காக, நேரம் மற்றும் பணத்தை செல­வி­டவும் தயா­ராக உள்­ளனர். நல்ல சம்­பளம் மற்றும் பதவி உயர்வை பெறு­வ­தற்­காக, அவர்கள் கற்றுக் கொள்ள தயா­ராக இருக்­கின்­றனர்.
எப்போதும் வாய்ப்புஇளை­ஞர்கள், வேலை­வாய்ப்பு பற்­றியும் நம்­பிக்கை மிக்­க­வர்­க­ளாக உள்­ளனர். பெரும்­பா­லானோர் தங்கள் வேலை­வாய்ப்பு பற்றி நம்­பிக்கை கொண்­டுள்­ளனர். 62 சத­வீதம் பேர், தற்­போ­துள்ள வேலையை இழந்­தாலும், 3 மாதங்­க­ளுக்குள் அடுத்த வேலை கிடைத்­து­விடும் என்ற நம்­பிக்கை பெற்­றுள்­ளனர். இந்­தி­யாவில் இது, 70 முதல் 80 சத­வீ­த­மாக இருக்­கி­றது.
அதிக வேலை நேரம்இக்­கால இளை­ஞர்கள், முந்­தைய தலை­மு­றை­யி­னரை விட அதிக நேரம் பணி புரி­கின்­றனர். இவர்­களில், 70 சத­வீதம் பேர், வாரத்­திற்கு சரா­ச­ரி­யாக, 40 மணி நேரத்­திற்கு மேல் பணி­யாற்­று­கின்­றனர். 25 சத­வீதம் பேர், வாரத்­திற்கு சரா­ச­ரி­யாக, 50 மணி நேரத்­திற்கு மேல் பணி­யாற்­று­கின்­றனர். இந்­திய இளை­ஞர்கள் தான், அதி­க­பட்­ச­மாக வாரத்­திற்கு சரா­ச­ரி­யாக, 52 மணி நேரம் பணி­யாற்­று­கின்­றனர்.
வாழ்நாள் வேலை இளம் ஊழி­யர்கள், முந்­தைய தலை­மு­றையை விட தாங்கள் அதிக காலம் பணி­யாற்ற வேண்டும் என அறிந்­தி­ருக்­கின்­றனர். உல­க­ளவில், 50 சத­வீதம் பேருக்கு மேல் தாங்கள், 65 வய­துக்கு மேல் பணி புரிய வேண்டி வரலாம் என நினைக்­கின்­றனர். இந்­தி­யாவில், 14 சத­வீதம் பேர் இவ்­வாறு கரு­து­கின்­றனர்.
பணம் பாதுகாப்புஇளம் ஊழி­யர்கள் வேலையை தேர்வு செய்யும் போது பணம், பாது­காப்பு மற்றும் ஓய்வு நேரம் ஆகிய மூன்று அம்­சங்­களை முக்­கி­ய­மாக கரு­து­கின்­றனர். மகத்­தான மனி­தர்­க­ளுடன் பணி­யாற்­று­வது, பணிச் சூழலை அனு­ப­வித்து செயல்­ப­டு­வது மற்றும் திறன் வளர்ச்சி ஆகி­ய­வற்­றையும் முக்­கி­ய­மாக கரு­து­கின்­றனர்.
ஆஸ்­தி­ரே­லியா, யு.கே.,- 41 மணி நேரம்கனடா, ஹாலந்து - 42 மணி நேரம்ஸ்பெயின், ஜெர்­மனி, இத்­தாலி - 43 மணி நேரம்பிரான்ஸ் - 44 மணி நேரம்அமெ­ரிக்கா, பிரேசில், நார்வே - 45 மணி நேரம்ஜப்பான் - 46 மணி நேரம்கிரீஸ் - 47 மணி நேரம்மெக்­சிகோ, சீனா, சுவிட்­சர்­லாந்து, சிங்­கப்பூர்- - 48 மணி நேரம்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)