பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:38
ஐதராபாத், : தெலுங்கானா அரசு, பார்மா சிட்டி ஒன்றை அமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது.மருந்து துறைக்காக, பிரத்யேகமான பார்மா சிட்டி ஒன்றை, வெகு விரைவில் அமைக்க இருப்பதாக, தெலுங்கானா மாநில அரசு தெரிவித்திருக்கிறது. தெலுங்கானா மாநில தொழில் துறை உள்கட்டமைப்பு கழகம், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஆராய்ந்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும் என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.பார்மா சிட்டிக்காக ரங்காரெட்டி, மெகபூப்நகர் மாவட்டங்களிலுள்ள, 12,500 ஏக்கர் நிலப்பரப்பை பயன்படுத்த இருப்பதாகவும் தெரிகிறது. மருந்து தயாரிப்பு உள்ளிட்ட, இத்துறை சார்ந்த அனைத்து பிரிவுகளுக்கும், இந்த சிட்டி ஒரே தீர்வாக இருக்கும் எனவும், மாநில அரசு தெரிவித்துள்ளது. பாரம்பரியமாகவே, தெலுங்கானா மருந்துகளின் தலைநகராக இருக்கிறது. இந்தியாவில் தயாராகும் மருந்துகள் மதிப்பில், மூன்றில் ஒரு பங்கு தெலுங்கானாவினுடையதாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|