பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:39
சென்னை, : டெய்ம்லர் இந்தியா நிறுவனம், 5,000 டிரக்குகளை ஏற்றுமதி செய்து, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.கடந்த, 2013ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், மூன்றாண்டு காலத்துக்குள்ளாக, 5,000 டிரக்குகளை இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. டெய்ம்லர் நிறுவனம், சென்னை ஒரகடத்தில் பாரத்பென்ஸ் டிரக்குகளையும், பஸ்களையும் தயாரித்து உள்நாட்டில் விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளுக்கு குறிப்பாக ஆசிய, ஆப்ரிக்க சந்தைகளுக்கு புசோ எனும் பிராண்டில் டிரக்குகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எரிக் நெஸல்லாப் கூறும்போது, வெற்றிகரமான உள்நாட்டு பாரத் பென்ஸ் வணிகம் எங்களுக்கு ஒரு துாண் என்றால், இன்னொரு துாண் ஏற்றுமதி வணிகம் ஆகும். 5,000 டிரக்குகளை மட்டுமின்றி, 90 லட்சம் உதிரி பாகங்களையும் ஏற்றுமதி செய்துள்ளோம் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|