பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:41
புதுடில்லி, : வலைதளம் வாயிலாக, புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, காப்புரிமை தொடர்பான விதிமுறைகளை, காப்புரிமை கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம்: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பான நடவடிக்கைகளை, அதற்கென உள்ளோர் மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், காப்புரிமை அலுவலகம் அளிக்கும் மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம். காப்புரிமை அலுவலகம், இவ்வகை நடவடிக்கைகளுக்காக, ஏற்கனவே, தகுதி வாய்ந்த, 280 பேரின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அவர்களில் ஒருவர் மூலம், காப்புரிமை, வடிவமைப்பு, வர்த்தக முத்திரை உள்ளிட்டவை பெறுவது தொடர்பாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|