பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:42
ஷாங்காய், : உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக, சீனா விளங்குகிறது. இருந்தபோதிலும், கடந்த ஆண்டு முதல், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து உள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் கடன்கள் அதிகரித்துள்ளன; ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்நிலையில், ‘பொதுத் துறை நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்க, சீனா உடனடியாக முயற்சிக்க வேண்டும்’ என, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. ‘‘நிறுவனங்களில் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு, கடன் சுமையை குறைக்க உரிய நடவடிக்கைகளை, சீன அரசு விரைந்து எடுக்க வேண்டும். இல்லையென்றால், பொதுத் துறை நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும். அவை நிதி திரட்டுவதும் கடினமாக இருக்கும்,’’ என, ஐ.எம்.எப்., முதல் நிலை துணை நிர்வாக இயக்குனர், டேவிட் லிப்டன் எச்சரித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|