பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:42
புதுடெல்லி, : நாம் மொபைல் போன் மூலமாக இன்னொருவருடன் பேசும்போதே இணைப்பு துண்டிக்கப்படும், ‘கால் டிராப்’ பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, இதற்கு காரணமான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிகாரம் அளிக்க வேண்டும் என, இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) கோரியுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு விதிகளில், 10 கோடி ரூபாய் வரை அபராதம், இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் டிராய் கோரியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தொலைத்தொடர்பு செயலர் ஜெ.எஸ்.தீபக், ‘‘டிராய் கோரியபடி கூடுதல் அதிகாரம் அளிப்பது மற்றும் தண்டனைகள் மட்டுமே கால் டிராப்புக்கு தீர்வு தராது. கால் டிராப் ஏற்படும்போதெல்லாம் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. மொபைல் சேவையின் தரம் மேம்படும் என அரசு நம்புகிறது. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 60 ஆயிரம் டவர்களை நிறுவ உள்ளதாக கூறியுள்ளன. ஒரு டவர் நிறுவுவதற்கு, 20 லட்சம் ரூபாய் தேவை. இதன்படி அடுத்த மூன்று மாதங்களில், 12 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|