பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:43
மும்பை, : டாடா குழுமம், அதன் கீழ் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளை, தலைமை பொறுப்பில் அமர்த்தும் திட்டத்தை துவக்கி உள்ளது.
தற்போது, டாடா குழுமத்தின் கீழ், 45 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 1.45 லட்சம் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
பிரத்யேக பயிற்சிஅதில், பல்வேறு பிரிவுகளின் தலைமை பொறுப்பில், 300 பெண் அதிகாரிகளை நியமிக்க, டாடா குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு, தலைமை பண்புகள் குறித்து, பிரத்யேக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வகையில், தேர்வு செய்யப்பட்ட பெண் உயரதிகாரிகளுக்கு, டாடா குழும நிறுவனங்களின் தலைவர்கள், தகுந்த பயிற்சி வழங்குவர். அதுமட்டுமின்றி, வெளி நிறுவனங்களின் தலைவர்களும், டாடா நிறுவனத்தின் பெண் உயரதிகாரிகளுக்கு, சிறப்பாக நிர்வாகத்தை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிப்பர்.
முதன் முதலாக...இதன் மூலம், டாடா நிறுவனத்தில், ஒரு பிரிவின் தலைமை பொறுப்பிற்கு வரும் பெண் அதிகாரி, பல்வேறு நிர்வாகச் சூழல்களை சிறப்பாக சமாளிக்க முடியும் என, கருதப்படுகிறது. இந்தியாவில், டாடா குழுமம், முதன்முதலாக இத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் டாடா குழுமம், 1,000 பெண் உயரதிகாரிகளை, அதன் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் பணியமர்த்த திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|