பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
13:47
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் கத்தரிக்காய் விலை வெகுவாக சரிந்துள்ளது.தமிழகத்தில் திண்டுக்கல், கோவை, தர்மபுரி, சேலம், தேனி, புதுக்கோட்டை, வேலுார், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கத்தரிக்காய் சாகுபடி நடக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி யில், ஆந்திராவில், 9 சதவீதம், கர்நாடகாவில், மூன்று சதவீதம் கத்தரிக்காய் விளைகிறது. தற்போது, தமிழகத்தில் கத்தரிக்காய் விளைச்சல் போதுமான அளவில் இல்லை.
ஆனால், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் உள்ளன. இதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு, கத்தரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மட்டும், தினமும், 10க்கும் மேற்பட்ட லாரிகளில், கத்தரிக்காய் வருகிறது. உஜாலா, வரி, பச்சை, நீட்டு, குண்டு கத்தரிக்காய் வகைகளின் விலைகள் சரிந்து வருகிறது.
கடந்த வாரம், ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய், தற்போது, 10 - 20 ரூபாய்வரை விற்பனையாகிறது. முக்கிய காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், கத்தரிக்காய் விலை சரிவு, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|