பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
14:30
சேவை வரி உயர்வால், தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, மாதந்தோறும், 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிதியை, அரசு தருமா என்ற எதிர்பார்ப்பில் கழகங்கள் காத்துஇருக்கின்றன.இம்மாதம், 1ம் தேதி முதல், சேவை வரி, 14.5 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, கர்நாடக அரசு, 'ஏசி' பஸ்களில், 6 சதவீதம் சேவை வரியை, பயணக் கட்டணத்தில் உயர்த்தினர்.
தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில், 100; அரசு விரைவு கழகத்தில், 50; விழுப்புரம் கழகத்தில், 11 என, மொத்தம், 161 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்களின் பயணக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால், நாள் ஒன்றுக்கு சராசரியாக, 1.60 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது; ஒவ்வொரு மாதமும், 50 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
'பஸ் பயணக் கட்டணத்தை உயர்த்தாமல், இந்த நிதியை அரசே, கழகங்களுக்கு வழங்கினால், 'ஏசி' பஸ்கள் இயக்கத்தால் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்' என, போக்குவரத்து கழக உயர் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|