பதிவு செய்த நாள்
14 ஜூன்2016
07:34
மும்பை : பி.வி.ஆர்., நிறுவனம், மூலதன செலவுகளுக்காக, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. பி.வி.ஆர்., நிறுவனத்திற்கு நாடு முழுவதும், 47 நகரங்களில், 121 இடங்களில், 553 சினிமா அரங்குகள் உள்ளன. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில், மூலதன செலவுகளுக்கு, 250 கோடி ரூபாயை ஒதுக்க முடிவு செய்து உள்ளது. இந்த நிதி, புதிய திரை அரங்குகள் அமைப்பதற்காக செலவு செய்யப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிற்குள், சினிமா அரங்குகள் எண்ணிக்கையை, 610 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பி.வி.ஆர்., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், சமீபத்தில், 32 சினிமா அரங்குகளை, 433 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. தற்போது, பெங்களூரு, நொய்டா, புனே, மும்பையில், அதிநவீன வசதிகளுடன் கூடிய, சினிமா அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|