பதிவு செய்த நாள்
14 ஜூன்2016
07:35
சண்டிகர் : பதஞ்சலி நிறுவனம், பால் பொருட்கள் மற்றும் கால்நடை தீவன விற்பனையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி என்ற பெயரில், ஆயுர்வேத உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிறுவனம், பால் பொருட்கள் மற்றும் கால்நடை தீவனங்கள் விற்பனையில் ஈடுபடுவதற்கு முடிவு செய்து உள்ளது.இதுகுறித்து, பாபா ராம்தேவ் கூறியதாவது: பால் பொருட்கள் தயாரிப்பதற்கு தேவைப்படும் பாலை கொள்முதல் செய்ய, 34 இடங்களில் மையம் அமைக்கப்படும். இதனால், விவசாயிகள் பயன் அடைவர். இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, இயற்கை அழகு சாதன பொருட்கள், பால் பொருட்கள், கால்நடை தீவனம், இயற்கை உரம் ஆகிய ஆறு பொருட்கள் விற்பனையில் ஈடுபட உள்ளோம். அடுத்த ஆண்டில், நிறுவனத்தின் விற்றுமுதல், 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|