பதிவு செய்த நாள்
14 ஜூன்2016
07:37
மும்பை : அனில் அம்பானியின், ‘ஆர்காம்’ என, சுருக்கமாக அழைக்கப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், மேக்சிஸ் குழுமத்தின் ஏர்செல் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இதற்கான பேச்சு நடைபெற்று வருகிறது. வரும் ஜூலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, தெரிகிறது. இதையடுத்து, ஆர்காம், அதன் ‘வயர்லெஸ்’ சேவையை தனியே பிரித்து, 600 கோடி டாலர் மதிப்பிலான, புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டு வரும். இந்நிறுவனம், புதிய பிராண்டு பெயரில், தொலைத்தொடர்பு சேவையை வழங்கும். ஏர்செல் மற்றும் ஆர்காம் நிறுவனங்கள், முறையே, 13 மற்றும், 11 வட்டங்களில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. ஆர்காம் – ஏர்செல் ஒப்பந்தம் கையெழுத்தானால், புதிய நிறுவனம், 12 – 18 கோடி சந்தாதாரர்களுடன், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக திகழும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|