பதிவு செய்த நாள்
14 ஜூன்2016
07:38
மும்பை : ஷீலா போம் நிறுவனம், 500 கோடி ரூபாய்க்கு, பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. ஷீலா போம் நிறுவனம், ‘ஸ்லீப்வெல்’லின் தாய் நிறுவனமாகும். இது, படுக்கை விரிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கான பணிகளை, ‘எடெல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன. பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,’ ‘செபி’யிடம் கோர உள்ளது. 2017 மார்ச் மாதத்திற்குள், பங்கு வெளியீடு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, ஷீலா போம் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதி, புதிய திட்டங்களுக்காக செலவு செய்யப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|