பதிவு செய்த நாள்
14 ஜூன்2016
07:38
மும்பை : பல்வேறு பொருட்களை வலைதளம் மூலம் விற்பனை செய்வோரின் விருப்பமான வலைதள நிறுவனங்களில், ‘அமேசான் இந்தியா’ முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடங்களை, ‘பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ ஆகியவை பிடித்துள்ளதாக, நீல்சன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், வலைதள நிறுவனங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யும், 1,184 விற்பனையாளர்களிடம் நீல்சன் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: ஆய்வில், 39 சதவீத விற்பனையாளர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வலைதளங்கள் மூலம் தங்கள் பொருட்களை விற்பனை செய்தால், வியாபாரம் வளர்ச்சி காணும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிரபலமான மின்னணு வலைதள நிறுவனங்களில், முதலில் நினைவுக்கு வருவது, அமேசான் என, 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அடுத்து, 21 சதவீதம் பேர் பிளிப்கார்ட் என்றும், 20 சதவீதத்தினர் ஸ்நாப்டீல் என்றும் கூறியுள்ளனர். அதிகமானோரிடம் விழிப்புணர்வு பெற்ற வலைதளமாக, அமேசான் விளங்குகிறது.
இந்நிறுவனத்திற்கு, 86 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனங்களை, முறையே, 82 மற்றும் 75 சதவீதத்தினர் குறிப்பிட்டனர். ‘பொருட்களை அறிமுகம் செய்வதாக இருந்தால், பிளிப்கார்ட் வலைதளத்தை தேர்வு செய்வோம்’ என, 58 சதவீதத்தினரும், அமேசான் என, 55 சதவீதத்தினரும், ஆய்வில் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|