பதிவு செய்த நாள்
14 ஜூன்2016
12:29
புதுடில்லி : தொடர்ந்து இரண்டாவது மாதமாக சில்லரை வர்த்தக பணவீக்கம் அதிகரித்துள்ளது. சிபிஐ., எனப்படும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் சில்லரை வர்த்தக பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் 5.39 சதவீதமாக இருந்த பணவீக்கம், மே மாதத்தில் 5.47 சதவீதமாக உயர்ந்தது.
உணவுப்பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக சில்லரை வர்த்தக பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக காய்கறிகளின் விலை ஏப்ரல் மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஏப்ரலில் 4.82 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்கம், மே மாதத்தில் 10.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த உணவுப்பொருட்களின் பணவீக்கத்தை பொருத்தமட்டில் 6.32 சதவீதத்திலிருந்து 7.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனிடையே பணவீக்கம் அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|