பதிவு செய்த நாள்
18 ஜூன்2016
07:33
புதுடில்லி : ‘இந்தியாவை சேர்ந்த முதலீட்டாளர்கள், எங்கள் நாட்டில், அதிக அளவில் முதலீடு செய்வதற்கு முன்வர வேண்டும்’ என, தாய்லாந்து நாட்டு தொழில் முதலீட்டு வாரிய துணை செயலர் சோக்தீ கவேசாங் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:இந்தியா – தாய்லாந்து இடையிலான பரஸ்பர வணிகம், 800 கோடி டாலர் என்றளவில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள், 20 கோடி டாலர் மதிப்பிற்கு, தாய்லாந்தில் முதலீடு செய்துள்ளன. தாய்லாந்து அரசு, நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, 5.34 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது. தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த, 1.20 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது. தாய்லாந்தில் தொழில் துவங்கும், அன்னிய நிறுவனங்களுக்கு, வரி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|