பதிவு செய்த நாள்
18 ஜூன்2016
07:34
புதுடில்லி : ரசாயன துறையை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இறங்க, மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதுகுறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த குமார் கூறியதாவது:நம் நாட்டில் ரசாயனம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், நாடு முழுவதும், 22 சுத்திகரிப்பு நிலையங்களையும் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த ஆலைகளில் பணிபுரிய, திறன் மிக்க தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக, மேலும் பல இடங்களில், ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி’ எனப்படும், சி.ஐ.சி.இ.டி.; ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி’ எனப்படும், சி.ஐ.பி.இ.டி., ஆகியவற்றை துவக்க திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|