பதிவு செய்த நாள்
18 ஜூன்2016
07:35
புதுடில்லி : சர்வதேச சந்தையில், கடந்த மூன்று மாதங்களாக, சர்க்கரை விலை, கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், வியாபாரிகள் லாபநோக்கத்தில், அதிக அளவில் சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதன் காரணமாக, உள்நாட்டில், சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன், 30 ரூபாய்க்கு விற்பனையான, ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்போது, 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், மூலச் சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதிக்கு, 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கரை ஏற்றுமதி குறைந்து, உள்நாட்டில், அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் என்பதால், அதன் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன. பிரேசில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில், சர்க்கரை விலை அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|