பதிவு செய்த நாள்
18 ஜூன்2016
07:38
புதுடில்லி : ஊபர் நிறுவனம், கூடுதலாக, 23 நகரங்களில் தன் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது. ஊபர் நிறுவனம், இந்தியாவில் உள்ள, 27 நகரங்களில், வாடகை கார்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், கூடுதலாக, 23 நகரங்களில், சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, ஊபர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டு இறுதிக்குள், 50 நகரங்களில், வாடகை கார் சேவையை இயக்க முடிவு செய்து உள்ளோம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் மூலம், டாடா நிறுவன கார்களை வாங்கி உள்ள டிரைவர்களுக்கு, எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்ல வாய்ப்பு வழங்கப்படும். மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, பேடிம், பாரத ஸ்டேட் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|